என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் - கமல்ஹாசன் சூளுரை

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், "இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும், அதற்கான பயணம் அடுத்த மாதத்தில் தொடங்கப்படும். என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து சரியாக இல்லை, அதை டிஜிட்டல் முறையில் சரிசெய்யவே நான் வந்துள்ளேன். ரசிகர் மன்ற நற்பணியின் வீச்சு இன்னும் அதிகமாகப் போகிறது. நற்பணி இயக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த வேண்டிய நேரம், கடமை வந்துள்ளது” என்றார்.

மேலும், பிப்ரவரி 24ஆம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலுக்கு நடிகர் கமல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

More News >>