20 ரூபாய் டோக்கனில் ஏமாந்து விட்டோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

எல்லாவற்றிலும் வெற்றி கண்ட நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏமாந்து விட்டோம். ஹவாலா மோசடி செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் எம்.எல்.ஏ.வாகி விட்டார் என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

இது குறித்து சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசை கவிழ்த்து விடலாம் என காலக்கெடு விடுத்து நாள் குறித்தனர். எதுவும் நடக்கவில்லை. 11 மாதங்கள் நிறைவு அடைந்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம். அவரது பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24-ந்தேதி அன்று வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மொபட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

எல்லாவற்றிலும் வெற்றி கண்ட நாங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏமாந்து விட்டோம். ஹவாலா மோசடி செய்து 20 ரூபாய் டோக்கன் கொடுத்து தினகரன் எம்.எல்.ஏ.வாகி விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>