பன்னீர் ஃப்ரைடு இட்லி ரெசிபி உங்களுக்காக..

காலையில் செய்த இட்லி மீதி ஆயிடுச்சா.. அப்போ அத வெச்சு ஒரு சூப்பர் டிஷ் செய்யலாம் .வாங்க.. யெஸ், பன்னீர் ப்ரைட் இட்லி ரெசிபி..

தேவையான பொருட்கள்:

இட்லி - 8

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 2

குடைமிளகாய் - ஒன்று

பன்னீர் - 100 கிராம்

எண்ணெய் - தேவையான அளவு

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

சாம்பார் தூள் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இட்லியை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.

இதன் பிறகு, மிளகாய் தூள், சாம்பார் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

அத்துடன் வெட்டி வைத்த இட்லி துண்டுகளை சேர்த்து மிதமான சூட்டில் கிளறி சிறிது நேரத்தில் இறக்கவும்.

அவ்ளோதாங்க சுவையான பன்னீர் ஃப்ரைட் இட்லி ரெடி..!

More News >>