லோக்சபா தேர்தல் கூட்டணி: மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக அழைப்பு

லோக்சபா தேர்தலுக்கான திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் அதிமுக- பாஜக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 27ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள மாநாட்டிற்கான அழைப்பிதழை அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்.

More News >>