வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது... தாடி பாலாஜி மீது போலீசில் மனைவி புகார்

நடிகர் தாடி பாலாஜி மீண்டும் குடிகாரராக மாறி தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவரது மனைவி நித்யா, போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் தாடி பாலாஜி. அண்மையில் பிக்பாஸ் சீசன் 2-ல் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும் பங்கேற்றனர்.

ஏற்கனவே தாடி பாலாஜியின் குடிகார சேட்டைகளால் அவரை விட்டு நித்யா, மகளுடன் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருவரது தகராறு பிரதானமாக பேசப்பட்டது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இருவரையும் சேர்த்து வைத்தார். இந்நிலையில் தாடி பாலாஜி குடித்துவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீசில் நித்யா புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் பாலாஜியை விசாரணைக்கு வரவழைத்துள்ளனர்.

More News >>