திமுகவுடன் நாளை மதிமுக பேச்சுவார்த்தை- ஐவர் குழு நியமனம்!

லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மறுமலர்ச்சி திமுக நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இதற்காக ஐந்து பேர் குழுவை மதிமுக பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இக்குழுவில் இடம்பெறுவோர்

1. அ. கணேசமூர்த்தி -- கழகப் பொருளாளர்

2. மல்லை சி.இ. சத்யா -- கழகத் துணைப் பொதுச்செயலாளர்

3. புலவர் சே. செவந்தியப்பன் -- அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர்

4. டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் -- ஆட்சிமன்றக்குழுச் செயலாளர்

5. டாக்டர் க. சந்திரசேகரன் -- உயர்நிலைக்குழு உறுப்பினர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பின்பேரில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்குழு நாளை 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயம் செல்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>