ஜெ. மரணம் இயற்கையானது இல்லை துன்புறுத்தப்பட்டதாக அவரே கூறினார் - கேரளா நம்பூதிரி

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. தான் துன்புறுத்தப்பட்டுதான் உயிரிழந்ததாக அவரே என்னிடம் சொன்னார் என்று கேரளா நம்பூதிரி வேங்கட சர்மா பேசியுள்ளார்.

இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வேங்கட சர்மா “ஜெயலலிதா ஒரு சித்தர். நிறைய மந்திரங்களை கற்று வைத்து கொண்டு அதை பயன்படுத்த முடியாமல் இருந்துள்ளார். பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவின் வாயை கட்டியதே ஜெயலலிதாவின் ஆவி தான்.

ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது டிசம்பர் 4 ஆம் தேதியும் இல்லை, 5 ஆம் தேதியும் இல்லை. 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே அவர் உயிர் பிரிந்தது. போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோவுக்கு செல்வதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.

தொண்டர்கள் செய்த பிரார்த்தனைகள் அவரை தெய்வ நிலையை அடைய வைத்துவிட்டது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல. தான் துன்புறுத்தப்பட்டுதான் உயிரிழந்ததாக அவரே என்னிடம் சொன்னார். ஜெயலலிதாவின் கோபம் சசிகலா மீது தான் அதிகமாக இருக்கிறது.

தினகரனை பற்றி அவர் எதையும் சொல்லியது இல்லை. ஆர்.கே.நகர் தேர்தல் ஜெயலலிதாவுடன் 20 வருடங்கள் இருந்ததால் அவரது அமானுஷ்ய சக்திகளை தினகரன் பெற்று விட்டதால் ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவின் ஆவியை ஆர்.கே. நகர் பக்கம் வராதபடி தடுக்கும் சக்தி தினகரனுக்கு உண்டு” என்றார்.

More News >>