சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து- 7 தொழிலாளர்கள் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாகினர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பல அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இவ்விபத்தில் சிக்கிய 7 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியாகினர்.

மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலையின் கட்டிட இடிபாடுகளில் சில தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

More News >>