உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு விட்டுக் கொடுப்பதை வெறுக்கிறேன் - சச்சின் கருத்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு வெல்வதையே விரும்பு கிறேன் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு, எதிரான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்தனர். இதனை ஆட்சேபித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் பாகிஸ்தானை களத்தில் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சச்சின், உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து நாம் தான் வெற்றி பெறுகிறோம். மீண்டும் ஒரு வெற்றி பெறுவது உறுதி. போட்டியை புறக்கணித்து பாகிஸ்தான் 2 புள்ளிகள் பெறுவதை தனிப்பட்ட முறையில் வெறுக்கிறேன் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஒட்டுமொத்த இந்தியாவின் கருத்துக்கு எப்போதும் உடன்படுவேன் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

More News >>