துப்பாக்கி முனையில் கணவன் கண் எதிரே மனைவி கற்பழிப்பு!

ஹரியானாவில் கணவனை துப்பாக்கு முனையில் நிறுத்தி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஞாயிறன்று பாதிக்கப்பட்ட பெண் இரவு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு திரும்புவதற்காக தனது கணவன் மற்றும் மைத்துனருடம் காரில் சென்றுள்ளனர். அப்போது குருகிராம் பகுதியில் உள்ள பிசினஸ் டவர் பார்க் அருகே, சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தியுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரண்டு கார்கள் அவர்கள் அருகே நின்றுள்ளது. உடனே காரில் இருந்த இறங்கிய மூன்று நபர்கள் கணவனையும், மைத்துனரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். நான்காவதாக வந்திறங்கிய மற்றொரு நபர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும், மர்ம நபர்கள் வந்த காரின் பதிவு எண்ணை கணவர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பேரில் குற்றவாளிகளை ஜொஹல்கா கிராமத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் கைது செய்துள்ளனர்.

ஹரியான மாநிலத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக 10 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கடந்த வாரம், ஓடும் காரில் சிறுமி ஒருவர் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

More News >>