விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் எம்.பி.ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி!

சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் எம்.பி.ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக நிர்வாகிகளுக்கு நேற்றிரவு கொடுத்த விருந்தில் பங்கேற்ற ராஜேந்திரன் எம்.பி, இன்று அதிகாலை காரில் ஊருக்கு திரும்பும்போது திண்டிவனம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ராஜேந்திரனின் மரணச் செய்தி அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னையிலிருந்து திண்டிவனம் விரைந்தனர்.திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் ராஜேந்திரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ராஜேந்திரனின் உடல் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விழுப்புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

More News >>