திமுக கூட்டணியில் மதிமுக எப்போதும் தொடரும் - வைகோ உறுதி!

திமுக கூட்டணியில் வரும் மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர்த்து மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியாகி உள்ளது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூடுதல் தொகுதிகள் கேட்க, திமுகவோ ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன் வந்ததால் இந்த இழுபறி என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருவதாகவும், இரண்டு நாட்களில் முடிவு எட்டப்படும் என்றார். மேலும் திமுகவுடனான கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும் என்று வைகோ உறுதிபடத் தெரிவித்தார்

More News >>