வீராங்கனை குளிப்பதை வீடியோ எடுத்த விடுதி ஊழியர் கைது!

விளையாட்டு வீராங்கனை குளியறையில் குளிக்கும் போது விடுதி ஊழியர் ஆபாசமாக வீடியோ படம் எடுத்ததற்கு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் தேசிய அளவிலான மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க பல மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் வந்துள்ளனர்.

பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கியிருந்தனர். ஒரு வீராங்கனை குளிப்பதை மர்ம நபர் ஒருவர் குளியலறை ஜன்னல் வழியே வீடியோ எடுத்துள்ளார்.

இதனை கண்டதும் அந்த வீராங்கனை கூச்சல் போட்டு கத்தியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வீடியோ எடுத்தவரை மடக்கிப் பிடித்துள்ளனர். அப்போது, அவர் விடுதியில் வேலை பார்க்கும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலாவுதீன் உசேன் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் குற்றவாளியை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். வெளி மாநிலத்தில் இருந்து விளையாடுவதற்காக வந்த வீராங்கனையை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More News >>