புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் - கறுப்புப் பட்டை அணிந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. ஆட்டம் தொடங்கும் முன் இரு நாட்டு தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

பின்னர் காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 14 - ந் தேதி பாக்.ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான இந்திய ரிசர்வ் படை வீரர்களுக்கு இரு அணி வீரர்களும் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

More News >>