கூட்டணிக்கு தேமுதிக வந்தா சந்தோஷம்.... வராட்டா நோ ப்ராப்ளம்...!

அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்.. வராவிட்டாலும் நோ ப்ராப்ளம் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நடத்திய தேமுதிக, கூடுதல் சீட் கேட்டு முரண்டு பிடிக்கிறது. இடையில் திமுக தலைவர் ஸ்டாலினும் விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்ததுடன் அரசியலும் பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் கூற, திமுகவுடனான கூட்டணிக்கும் தேமுதிக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனால் தேமுதிக எந்தக் கூட்டணியில் சேரும் என்ற அரசியல் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. அதிமுகவுடனான கூட்டணியில் விஜயகாந்த் இணைவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் சந்தோஷப்படுவோம். வராவிட்டாலும் ஒன்றும் வருத்தப்படப் போவதும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

More News >>