ஓட்டுக்குப் பணம் தந்தால் பிடித்துக் கொடுங்கள்! ஜெய் ஆனந்த் ஆலோசனை

ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் திவாகரன். நேற்று மண்ணை தேரடி திடலில் நடந்த விழாவில் பேசிய அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன், ' திராவிட கட்சிகளை சிலர் தவறாக பேசுகிறார்கள்.

திராவிடக் கட்சிகளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு வேலைக்கு செல்வதில்லை. வட நாட்டை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்துக்கு வேலைக்கு வருகிறார்கள்.

தமிழர்கள் வேலை தேடி வெளிநாட்டுக்குக்குத்தான் செல்கிறார்கள். மனிதர்களுக்குத்தான் கேன்சர் வரும். தற்போது தமிழக அரசியலுக்கும் கேன்சர் வந்திருக்கிறது.

அது ஓட்டுக்கு பணம் கொடுப்பது. ஒரு தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பணம் தர ரெடியாகத்தான் இருப்பார்கள். நீங்கள் முதல் வேட்பாளரை பணம் தரும் போது பிடித்துக் கொடுத்தால் மற்றவர்கள் யோசிப்பார்கள்.

இளைஞர்களின் கையில் தான் அது இருக்கிறது. இப்படியே போனால் நாம் வருங்கால சந்ததியினருக்கு கல்லாப்பெட்டியைக்கூட கொடுத்துவிட்டுப் போக முடியாது. சவப்பெட்டியை தான் கொடுத்துவிட்டுப் போக முடியும்' என்றார்.

More News >>