தயவு செய்து மோடிக்கு அண்ணன் வைகோ கறுப்புக்கொடி காட்ட வேண்டாம் - பொன்.ராதாகிருஷ்ணன் கெஞ்சல்!

கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடிக்கு தயவுசெய்து அண்ணன் வைகோ கறுப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் கறுப்புக்கொடி காட்டுவேன் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கறுப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகிறார். மதுரை, திருப்பூரில் வைகோ நடத்திய கறுப்புக்கொடி போராட்டங்கள் இந்திய அளவில் ஹைலைட்டானது.

இந்நிலையில் வரும் 1-ந் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகிறார். இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறார்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, திருப்பூரில் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். அதுபோல் வரும் 1-ந் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி, தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களை அறிவிக்க உள்ளார்.

அதனால் மதிப்பிற்குரிய அண்ணன் வைகோ அவர்களை தயவு கூர்ந்து கேட்டுக் கொள்வது, பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம் நடத்த வேண்டாம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More News >>