திமுக கூட்டணி இந்த முறையும் தோற்கும் - மு.க. அழகிரி பொளேர்!

வரும் மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி தோற்கும் என்று மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி சமீப காலமாக அமைதி காத்து வந்தார். திமுகவில் மீண்டும் மு.க.அழகிரி சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது.

இதனால் தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் எந்த நேரத்திலும் மு.க.அழகிரி அதிரடி தாக்குதலை தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி கூறுகையில், கடந்த 2014 பொதுத் தேர்தலில் தோற்றது போல் இந்தத் Gதர்தலிலும் திமுக கூட்டணி தோற்கும் என்றார். இந்தத் தேர்தலில் தமது ஆதரவு யாருக்கும் இல்லை என்றும் மு.க.அழகிரி தெரிவித்தார்.

கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே திமுகவில் கலகக் குரல் எழுப்பியவர் மு.க.அழகிரி. கடந்த 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோல்விக்கு தென்மாவட்டங்களில் மு.க.அழகிரியின் உள்ளடி வேலைகளும் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More News >>