பெங்களூருவில் இன்று 2-வது டி20 போட்டி - ஆஸ்திரேலியாவை பழி தீர்க்குமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று இரவு நடக்கிறது. முதல் போட்டியில் தோற்றதற்கு, ஆஸ்திரேலியாவை பழி தீர்த்து தொடரை இந்தியா சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரு டி20 போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டி தொடரில் ஆடுகிறது.கடந்த 24-ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங்கில் சொதப்ப 126 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஆனாலும் இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் திணறிய ஆஸி அணி, கடைசிப் பந்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்தத் தோல்விக்கு பதிலடியாக இன்று பெங்களூருவில் நடக்கும் 2-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்தியா கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

More News >>