`என் வாழ்க்கை நாசமானத்துக்கு காரணம் எஸ்.ஐயும் ஜிம் ட்ரெயினரும் தான் - தாடி பாலாஜி கதறல்!

குழந்தையின் வாழ்க்கையை சீரழிக்கிறார் தன் மனைவி நித்யா என நடிகர் தாடி பாலாஜி புகார் கூறியுள்ளார்.

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னை இப்போதைக்கு முடியாது என்பது போல் இருவரும் ஒருவரை ஒருவர் மீண்டும் புகார் கூற ஆரம்பித்துள்ளனர். காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் கடந்த வருடம் பிரச்னை ஏற்படவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இருவரும் ஒன்றிணையவுள்ளதாக பேச்சு எழுந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பாலாஜி தன்னை மீண்டும் துன்புறுத்துவதாகவும், குடித்துவிட்டு வந்து தகராற்றில் ஈடுபடுவதாகவும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூறினார். இது பரபரப்பை கிளப்பியது. நித்யாவின் இந்தப் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் தாடி பாலாஜி. அப்போது, ``பலமுறை யோசித்த பின்பு தான் இந்த பிரஸ் மீட் வைக்குறேன். நானும் நித்தியாவும், காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். தற்போது என்களுக்கு ஒரு அழகான குழந்தை இருக்கிறாள். ஆரம்பத்தில் எல்லா குடும்பங்களை போன்றும் சந்தோஷமாக தான் நாங்களுக்கும் இருந்தோம்.

என் குடும்பம் இப்படி மன உளைச்சலுக்கு ஆளானதற்கு முக்கிய காரணம் எஸ்.ஐ. மனோஜ் குமார் என்பவர்தான். அவரும் ஜிம் ட்ரெயினர் பசிலும் தான். மனோஜ் குடும்ப நண்பராக அறிமுகமான அவர் பின் தன்னுடைய மனைவி நித்தியாவிடம் பழக துவங்கினார். இவர்கள் இருவரும் பேசுவதற்காகவே ஐந்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்துள்ளனர். மேலும் நானே, அல்லது என்னுடைய வழக்கறிஞர் என யார் நித்தியாவிடம் பேசினாலும் உடனடியாக எஸ்.ஐ.மனோஜ் குமாருக்கு தெரிந்து விடும். தனது மனைவி நித்யாவால் தனது குழந்தையின் எதிர்காலம் பாழகிறது. மனோஜ் குமாருடன் சேர்ந்துகொண்டு மகளின் வாழ்க்கையை சீரழிக்கிறார். மனோஜ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை புகார் கூறிவிட்டேன். ஆனால் நடவடிக்கை இல்லை. இனிமேலாவது போலீஸ் கமிஷனர் அவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும்.

நித்யாவை செயல்பட வைப்பது மனோஜ் தான். என்னுடை குடும்பம் ஒன்று சேர வேண்டும் என விஜய் டிவிக்கு எந்த நோக்கமும் இல்லை. நித்யா பிக்பாஸில் செய்தது அனைத்துமே நடிப்பு. பிக்பாஸ் செட்டிலிருந்து வந்து நான் என் அம்மா வீட்டிற்கு தான் சென்றேன். நித்யாவை பார்க்க செல்லவே இல்லை. நித்யா சொல்வது அனைத்துமே பொய். பணதேவைக்காக மட்டுமே என்னிடம் அவர் பேசி வந்தார். என் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒரு தந்தையாக செய்ய நான் தயார். மகளை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும். என் மகளின் படிப்பை செலவை நானே பார்த்து கொள்கிறேன். என் மகளை பகடைக்காயாக பயன்படுத்துகிறார் நித்யா. என் குழந்தையை பார்க்க விடவில்லை" எனக் கண்ணீர் மல்க கூறினார்.

More News >>