காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் தொடரும் மோதல்- 2 பேரை வளைத்தது ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். 2 தீவிரவாதிகளை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.

காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹந்த்வாரில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் ராணுவத்துக்குக் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை ராணுவம் சுற்றி வளைத்தது.

இதை எதிர்ப்பார்க்காத தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.

தற்போதைய செய்திகளின் படி அங்கு பதுங்கி இருந்த 2 தீவிரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

 

விமானத் தாக்குதலால் பாஜக அலை வீசுகிறதா? பாகிஸ்தானின் விமர்சனத்தால் 'பேக்' அடித்த எடியூரப்பா!

More News >>