அபிநந்தன் விடுதலை விவகாரம்... ட்விட்டரில் சுப.வீயுடன் மல்லுக்கட்டும் எச். ராஜா

இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்யும் விவகாரத்தில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீயுடன் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மல்லுக் கட்டிக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக இன்று காலை சுப.வீ வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

#அபிநந்தன் விடுதலை ஆவார் என்ற #இம்ரான்கான் அறிவிப்பில் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்?

சுபவீயின் இந்த பதிவுக்கு பதிலாக எச். ராஜா சற்று முன்னர் வெளியிட்ட ட்வீட்:

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் இராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர்.

ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலை பார்க்காமல் ஜாதீய பதிவிட்டவர் தானே இவர்

இருவரது கருத்துகளுக்கு ஆதரவாக, எதிராக ட்விட்டரில் பெரும் யுத்தமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

More News >>