வாகா எல்லை வழியே நாடு திரும்பும் விமானி அபிநந்தன் - உற்சாக வரவேற்பளிக்க தேசியக் கொடியுடன் திரண்ட பொதுமக்கள்!

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்ப்பட்ட இந்தியப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை உற்சாகமாக வரவேற்க வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

இந்தியப்படை விமானி அபிநந்தனை இந்தியா பாகிஸ்தான் எல்லையான வாகாவில் இன்று பாகிஸ்தான் ஒப்படைக்க உள்ளது. இதனால் வாகா எல்லைப் பகுதியில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அபிநந்தனை வரவேற்க பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் வாகா விரைந்துள்ளார். இந்திய ராணுவ அதிகாரிகளும் தயார் நிலையில் காத்துள்ளனர். விமானி அபிநந்தனின் பெற்றோரும் அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

பொதுமக்களும் அபிநந்தனுக்கு உற்சாக வரவேற்பளிக்க கைகளில் தேசியக் கொடிகளுடன் திரண்டிருப்பதால் வாகா எல்லை களை கட்டியுள்ளது.

More News >>