பிளீஸ்... தேர்தலில் போட்டியிடாதீர்கள் மோடி - வறுத்தெடுத்த நடிகை ரோகிணி!

நடிகை ரோகிணி சமீபத்தில் மலையாள மனோரமா சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்தார்.

திரைப்பட இயக்குநர், நடிகை, குழந்தை நட்சத்திரம், பாடலாசிரியர், கதை வசனகர்த்தா, டப்பிங் கலைஞர் என பன்முக கலைஞராக வலம் வருகிறார் நடிகை ரோகிணி. தென்னிந்திய சினிமாக்களில் தற்போது சில படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது சமூக பிரச்சனைகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தமிழக மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் மலையாள மனோரமா சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்துள்ளார் நடிகை ரோகிணி.

அதில், ``எனக்கு மோடியிடம் கேட்பதற்கு எல்லாம் ஒன்றும் இல்லை. அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம் மட்டும் உள்ளது. தயவு செய்து வரும் தேர்தலில் போட்டியிடாதீர்கள். இனிமேலும் இப்படியொரு பாசிசமான ஆட்சி நாட்டுக்குத் தேவையில்லை. ஏற்கனவே கடந்த 5 ஆண்டுகளாக இந்துதுவாவால் அதிக அளவில் அனுபவித்துவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, எதிராகப் பேசுபவர்களைக் கொலை செய்பவர்களை ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை’’ என அதிரடியாக கூறினார். அவரின் கருத்து தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

More News >>