தக்காளி வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

இந்தூரில் தக்காளி வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் சந்தை பகுதியில் 70 கூடைகளில் இருந்த 300 கிலோ தக்காளி அண்மையில் களவாடப்பட்டது. இதன் மதிப்பு 70 ஆயிரம் ஆகும். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த சந்தையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. இதனால், திருடர்களை பிடிக்க போலீசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையின்தான் மத்தியபிரதேசத் தலைநகர் இந்தூரில் சந்தைக்கு வரும் தக்காளி வாகன ங்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 100க்கு விற்பனையாகிறது.

 

More News >>