திமுக கூட்டணியில் இணைகிறது பாரிவேந்தரின் ஐ.ஜே.கே.-அறிவாயலத்தில் இன்று பேச்சுவார்த்தை!

திமுக கூட்டணியில் சேர பச்சமுத்து (எ) பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி முடிவெடுத்துள்ளது. இதனால் இன்று அண்ணா அறிவாயலத்தில் கூட்டணிப்பேச்சு நடத்தப்படுகிறது.

கடந்த 2014 பொதுத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் பெரம்பலூரில் பாரிவேந்தர் போட்டியிட்டார். இம்முறையும் அதிமுக, பாஜக கூட்டணியில் சேர பாரிவேந்தர் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதிமுக கூட்டணி அவரைக் கழட்டி விட்ட நிலையில் திமுக கூட்டணி சேர முடிவெடுத்துள்ளார்.

இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாரிவேந்தர் கூட்டணி குறித்து பேச்சு நடத்தவுள்ளார். திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்படும் என்றும் உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டியிடுவார் என்றும் தெரிகிறது.

More News >>