குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் ஆங் சான் சூகி

புதுடெல்லி: வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொள்வதற்காக மியான்மர் ஆலோசகர் ஆங் சான் சூகி இன்று தலைநகர் டெல்லி வந்தடைந்தார்.

இந்தியாவின் குடியரசு தின விழா நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அணிவகுப்பு நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆசியான் அமைப்பில் உள்ள 10 நாடுகளின் தலைவர்கள் இந்த ஆண்டு பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ள மியான்மர் தேசிய ஆலோசகர் ஆங் சாஜ் சூகீ இன்று டெல்லி வந்தார். இவரை மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா படேல் மலர் கொத்து வழங்கி வரவேற்றார். இதேபோல் சிங்கப்பூர் பிரதமர் லீ சைன் லூங்க்கும் இன்று தலைநகர் வந்தடைந்தார். அவரை மத்திய இணையமைச்சர் விரேந்திர குமார் வரவேற்றார்.

More News >>