ஒரே ஒரு சீட்தான்... திமுக கறார்... தினகரன் பக்கம் தாவும் திருமாவளவன்

லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதிதான் ஒதுக்கப்படும் என திமுக கறாராக கூறிவிட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் படு அப்செட்டில் இருக்கிறாராம். அனேகமாக தினகரன் அணிக்கு திருமாவளவன் தாவக் கூடும் என கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள்தான் வேண்டும் என அடம்பிடித்தார் திருமாவளவன். ஆனால் திமுக தரப்போ ஒரு தொகுதியே அதிகம் என்பதில் உறுதியாக நின்றுவிட்டது.

இதனால் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியில் வெளியேறினார் திருமாவளவன். திமுக தரப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவும் திருமாவளவன் செல்லவில்லை.

திமுகவைப் பொறுத்தவரையில் விடுதலை சிறுத்தைகள் வெளியேறினால் நல்லது என நினைக்கிறது. தற்போது தினகரன் அணியில் இணைவது தொடர்பாக திருமாவளவன் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News >>