தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட கனிமொழி இன்று விருப்ப மனு தாக்கல்

தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிட திமுக எம்.பி. கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்கிறார்.

ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள கனிமொழி இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூத்துக்குடி தொகுதியில் நலத்திட்ட உதவிகள், கிராம சபை கூட்டங்கள், மருத்துவ முகாம்கள் என வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கனிமொழிக்கு எதிராக வலுவான வேட்பாளரை அதிமுகவும் களம் இறக்க உள்ளது. இதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூவும் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கனிமொழி இன்று அண்ணா அறிவாலயத்தில் தூத்துக்குடியில் போட்டியிட விருப்ப மனு அளிக்க இருக்கிறார்.

More News >>