கூட்டணி கட்சிகளுடன் இன்று திமுக இறுதி கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து திமுக இன்று இறுதி கட்ட ஆலோசனையை நடத்துகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக அணியில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஜேகே ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதிகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

விருதுநகரில் திமுகவின் தென்மண்டல மாநாடு வரும் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய திமுக விரும்புகிறது.

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று திமுக, கூட்டணிக் கட்சிகளுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்துகிறது.

More News >>