விஜயகாந்துடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு - பேரத்தில் தேமுதிக தொடர்ந்து பிடிவாதம்

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார். உடல் நலம் விசாரித்ததாகவும், கூட்டணி பற்றி இன்றோ, நாளையோ நல்ல முடிவு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு தேமுதிக தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சென்றனர்.

இதனால் அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி பற்றிய முடிவு எட்டப்படும் என பரபரப்பாகக் காணப்பட்டது. விஜயகாந்தை சந்தித்து விட்டு வெளியில் வந்த ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்தேன். நல்ல உடல்நலத்துடன் உள்ளார். கூட்டணி குறித்து இன்றோ நாளையோ அறிவிப்பு வெளியாகும் என்றவர், 6-ந் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் விஜயகாந்தும் நிச்சயம் பங்கேற்பார் என்று கூறினார்.

அதிமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு தேமுதிக தொடர்ந்து பிடிவாதம் செய்வதாக கூறப்படுகிறது.

More News >>