மக்களவைத் தேர்தலில் மட்டும் திமுக கூட்டணிக்கு ஆதரவு - தமிமுன் அன்சாரி, யாருக்கும் ஆதரவு இல்லை - நடிகர் கருணாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்த சுயேட்சை எம்எல்ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் மக்களவைத் தேர்தலில் வெவ்வேறு நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்த உடனே கொங்கு நாடு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய 'ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப் படையின் நடிகர் கருணாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவான இவர்கள் மூவரும் தற்போது நடக்க உள்ள இடைத்தேர்தலில் தங்கள் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாஜக தவிர்த்து அதிமுக கூட்டணியின் பிற கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு என தனியரசு கூறிவிட்டார். ஆனாலும் இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்திலும் பங்கேற்பேன் என்றும் தனியரசு தெரிவித்துள்ளார்.

தற்போது நடக்கவுள்ள மக்களவைத் தேர்த லுக்கு மட்டும் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஆதரவு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

மற்றொரு சுயேட்சை எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப் படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கூறுகையில், தற்போதைய நிலையில் யாருக்கும் ஆதரவு இல்லை. தேர்தல் அறிவிப்பு வெளியான பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.

More News >>