அதிமுகவுடன் கூட்டணியா...தனித்துப் போட்டியா...விஜயகாந்த் அவசர ஆலோசனை

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? அல்லது தனித்துப் போட்டியா? என்பது குறித்து தேமுதிக உயர்மட்டக் குழு உறுப்பினர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி இன்றே முடிவு அறிவிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக, திமுக என இரு தரப்பிலும் கூட்டணிப் பேச்சு நடத்திய தேமுதிக நிலைமை இப்போது பரிதாபத்துக்கு ஆளாகியுள்ளது.

திமுக தரப்புடன் கூட்டணிப் பேசியதை துரைமுருகன் அம்பலப்படுத்திவிட்டதால் இனிமேல் திமுகவுடன் கூட்டணிக்கு செல்ல தேமுதிகவுக்கு வாய்ப்பே இல்லை என்றாகிவிட்டது. பாஜகவின் விருப்பப் படி அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் 4 தொகுதிகளுக்கு மேல் கிடையாது என்று கறார் காட்டப்படுகிறது.

இதனால் இக்கட்டான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது தேமுதிக. எனவே அடுத்த கட்ட முடிவு எடுக்க தேமுதிக உயர்மட்டக் குழுக் கூட்டத்தை விஜயகாந்த் இன்று கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்திய பின் 4 தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணியா? அல்லது தனித்துப் போட்டியிடுவதா? என்ற முடிவை விஜயகாந்த்சு றிவிப்பார் என்று கூறப்படுகிறது.

More News >>