இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு

புதுடெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு இந்தாண்டிற்கான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு உரிய பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. அந்த வகையில், இந்தாண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன், பத்ம புஷன் ஆகிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதுக்கு அடுத்ததாக உயரிய குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம விபூஷன் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதுரை தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் பேராசிரியர் ராஜகோபாலன் வாசுதேவன், தமிழக நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் ஞானம்மாள் (98), அரவிந்த் குப்தா, லட்சுமி குட்டி (கேரளா), சுபசினி மிஸ்திரி (மேற்குவங்கம்), பாஜூஷ்யாம், சுதன்ஷூ பிஸ்வாஸ், சுலாகட்டி நரசம்மா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>