காஞ்சனா nbsp3 - லாரன்ஸ் மீது கடும்கோபத்தில் தயாரிப்பு நிறுவனம்

லாரன்ஸின் காஞ்சனா 3ஆம் பாகத்தை வெளியிடுவதில் பல சிக்கல்கள் நிழவி வருகிறது. அதனால் படத்தயாரிப்பு ராகவா லாரன்ஸ் மீது அதிருப்தியில் இருக்கிறது. 

ராகவா லாரன்ஸ் எழுதி, இயக்கிய முனி, முனி2 ;காஞ்சனா , முனி 3: காஞ்சனா 2 படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. தற்பொழுது முனி நான்காம் பாகமான, அதாவது காஞ்சனா 3 தற்பொழுது இயக்கி, நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் முதலில் ஏப்ரல் 18ல் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. பின்னர், ஏப்ரல் 12க்கு வெளியாகும் என்று தெரிவித்தார்கள். இறுதியாக மே 1ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏப்ரலில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட படம்,  மே மாதத்துக்கு தள்ளிச் செல்ல என்ன காரணம் என்கிற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. 

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் இருப்பதால் தள்ளி வைத்திருக்கிறோம் என்று படத்தரப்பில் பேசும் போது கூறினார்கள். ஆனால், உண்மை நிலவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது.  படம் இன்னும் முழுமையாக முடியவில்லை என்பதே படம் தள்ளிப்போக நிஜ காரணம்.  ஏனெனில், படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு முறை முதல் கட்ட எடிட்டிங் முடிந்ததும் படத்தைப் போட்டுப் பார்த்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.   படம் திருப்தி தரவில்லை என்று ஓவியாவிற்கான காட்சிகளை மறு படப்பிடிப்பு நடித்தியிருக்கிறது படக்குழு. இருப்பினும் முழு திருப்தியடையாத ராகவா லாரன்ஸ்  படத்தை இன்னும் முடிக்கவில்லை.  ஏப்ரலிலே முடித்து விடுவேன் என்று வாக்குறுதி கொடுத்த ராகவா லாரன்ஸ் படத்தை முடித்து தராததல்  பட வெளியீட்டை தள்ளிவைத்தது தயாரிப்பு தரப்பான சன்பிக்சர்ஸ். இதனால் ராகவா லாரன்ஸ் மீது கடுங் கோபத்திலும் இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. 

 

 

More News >>