டிராபிக் இன்ஸ்பெக்டராக nbspசித்தார்த்.. பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷ்

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்துக்குப்  பிறகு, இயக்குநர் சசியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

 

உணர்வுகளை மையப்படுத்தி படங்களை எடுப்பதில் வல்லவர் இயக்குநர் சசி. சொல்லாமலே, ரோஜா கூட்டம், பூ, டிஷ்யூம் என்று இவரின் அனைத்துப் படங்களுமே நல்ல ஹிட். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசி இயக்கத்தில் கடந்த 2016ல் வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு இரு மொழிகளிலுமே நல்ல வசூல் சாதனையும் படைத்தது. 

 

இந்நிலையில், சசி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவிருக்கும் அடுத்த படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. அக்காள் - தம்பி இடையேயான உறவினை மையமாக கொண்ட கதை.  அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் (தமிழில் அறிமுகம்) நடிக்க அவரின் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.   முதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிகர் சித்தார்த் இப்படத்தில் நடிக்கிறார். அதுபோல பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். 

இப்படத்தினை பிரசன்னா S குமார் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார்.  தமிழ்த் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை இந்தப்படத்தைத் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

More News >>