மோடி தான் டாடியாக வழி நடத்துகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காமெடி

அம்மா ஜெயலலிதா இல்லாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடிதான் ‘டாடி’யாக இருந்து எங்களை எல்லாம் வழிநடத்தி வருகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல், இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.

ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல், நாங்கள் எல்லாம் தவித்து வருகிறோம். இப்போது, பிரதமர் மோடிதான் ‘டாடி’யாக இருந்து எங்களை எல்லாம் வழி நடத்தி வருகிறார். இந்தியாவில் மோடியின் அரசு மீண்டும் வர வேண்டும்; தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடர வேண்டும் என்றார்.

More News >>