காலையில் தந்தைக்கு சீட் ... மாலையில் மனைவிக்கு சீட்... சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் அசத்தல்

உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுக்கான சமாஜ்வாதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் தனது தந்தை முலாயமுக்கு சீட் கொடுத்த அகிலேஷ் யாதவ், தொடர்ந்து மாலையில் வெளியிட்ட அடுத்த பட்டியலில் மனைவி டிம்பிள் யாதவ் பெயரை இடம் பெறச் செய்து அறிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சி சார்பில் முலாயம் சிங் யாதவ், டிம்பிள் யாதவ் இருவரும் தற்போது எம்.பி.யாக உள்ளனர். கடந்த 2014 தேர்தலில் மெயின் புரி, அசாம்கர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்ற முலாயம் சிங், மெயின் புரி தொகுதியில் வென்றதை ராஜினாமா செய்தார். நேற்று காலை சமாஜ்வாதி சார்பில் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் மெயின்புரி தொகுதியில் முலாயம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

நேற்று மாலையே 3 தொகுதிகளுக்கான இரண்டாவது பட்டியலையும் அகிலேஷ் வெளியிட்டார். மகளிர் தினத்தில், மகளிருக்கும் சம உரிமை, அதிகாரம் வழங்குவதாகக் கூறிய அகிலேஷ், பட்டியலில் தனது மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்ட 3 பெண்களின் பெயரை இடம் பெறச் செய்திருந்தார். டிம்பிள் யாதவுக்கு தற்போது எம்.பியாக உள்ள கன்னோஜ் தொகுதியே மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது

More News >>