கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு? போஸ்டர் அலப்பறைகளுடன் மல்லுக்கட்டும் பொன்முடி மகன் - ஐஜேகே பாரிவேந்தர்!

கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு என திமுகவில் ‘அடிதடி’ யுத்தமே தொடங்கும் நிலைமை உருவாகிவிட்டது.

திமுக கூட்டணியில் பெருந்தொகை கொடுத்து இடம்பிடித்தவர் ஐஜேகேவின் பாரிவேந்தர். அவருக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் பெரம்பலூர் வேண்டாம்; கள்ளக்குறிச்சிதான் வேண்டும் என அடம்பிடிக்கிறார் பாரிவேந்தர். கள்ளக்குறிச்சியை பாரிவேந்தருக்கு தரக் கூடாது; அது என் மகனுக்குத்தான் என்பது பொன்முடியின் அடம்.

இந்நிலையில் திமுகவில் 21 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கியது. நாளைதான் லோக்சபா தொகுதிகளின் வேட்பாளர்கள் நேர்காணல் தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி தொகுதியிலோ, பொன்முடி மகனும் பாரிவேந்தரும் போட்டிக் கொண்டு போஸ்டர் அலப்பறைகளில் களம் இறங்கிவிட்டனர். இந்த போஸ்டர்கள்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எழில் பிரதீபன்

More News >>