தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது எழுந்து நிற்காத கருணாநிதி - எச்.ராஜா

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது திமுக தலைவர் கருணாநிதி எழுந்து நிற்காத புகைப்படத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காததும், அதற்கு காஞ்சி மடம் அளித்த விளக்கமும் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு தமிழுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி எழுந்து நிற்காததைப் போல காட்டும் காணொளி ஒன்றையும், புகைப்படம் ஒன்றையும் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

முதலாவதாக பதியப்பட்டுள்ள காணொளியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது கருணாநிதி அமர்ந்திருப்பது போன்றும், அடுத்ததாக பதியப்பட்டுள்ள புகைப்படத்தில் கருணாநிதி நின்றிருப்பது போன்றும் ராஜா வெளியிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More News >>