ஜெ. மரணத்துக்கு காரணமே பா.ம.க.தான்.. தினகரன் கோஷ்டி புகழேந்தி பரபர புகார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே பாட்டாளி மக்கள் கட்சிதான் என தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பெங்களூர் புகழேந்தி அளித்த பேட்டி:

ஜெயலலிதா மீது வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது ஜெயலலிதாவுக்கு விரைவாக தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியது பாமக.

இதனால்தான் ஜெயலலிதா சிறைக்கு செல்லவும் நேரிட்டது. அங்கு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதுவே ஜெயலலிதாவின் மரணத்துக்கும் காரணமாக அமைந்தது. இப்படி ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமான பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது ஏன்?

இந்த கூட்டணியை அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

More News >>