அந்தமானில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!

அந்தமான் தீவுகளில் கடலுக்கு அடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி பீதி ஏற்பட்டுள்ளது.

அந்தமான் தீவுப் பகுதிகளில் இன்று காலை 6.44 மணியளவில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் குவிந்தனர்.

அந்தமான் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தது தெரியவந்துள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டரில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பதால் சுனாமி ஏற்படுமோ என்கிற அச்சமும் மக்களிடையே ஏற்பட்டது. ஆனால் அரசு தரப்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

More News >>