பொள்ளாச்சி பயங்கரம்.... பேஸ்புக் மூலம் பழகி பாலியல் வன்கொடுமை... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பேஸ்புக் மூலம் காதல் வலை வீசி அவர்களை ஆபாசமாக படம் எடுத்து ஒரு கும்பல் பணம் பறித்து மிரட்டி வந்தது. அந்த கும்பலை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

உன்னை ஃப்ரெண்டுனு நம்பித்தான வந்தேன் என்று அந்தப்பெண் கதறுவதும், அதனை பொருட்படுத்தாத கொடூரன், மறைமுகமாக வீடியோ எடுக்கச்சொல்வதும், அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தங்களிடம் சிக்கிய பெண்களை இந்த கும்பல் அடித்து துன்புறுத்தி ஆபாசமாக வீடியோ பதிவு செய்யும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான நாகராஜ் என்பவர் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர். இதனால் அவரை காப்பாற்ற தமிழக அமைச்சர் ஒருவர் மூலம் வேலை நடந்து வருவதாக பேசப்பட்டு வருகிறது. இதற்காக பல கோடிகள் பணம் லஞ்சம் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பெண்கள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. பார்க்கவே, பதைபதைப்பை ஏற்படுத்தும் இந்த வீடியோவால் பரபரப்பு உண்டாகியுள்ளது. சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக கட்சியின் கொள்கைக்கும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் நாகராஜை இருந்து நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

More News >>