கூட்டணி போதையில் பொள்ளாச்சி விவகாரத்தை மறப்பதா? கட்சிகளுக்கு அ.தி.க. ஜெய் ஆனந்த் திவாகரன் கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், கூட்டணி போதையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக, அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் மற்றும் இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் நடந்துள்ளது. இதில் கவனம் செலுத்தாமல், கண்டனம் தெரிவிக்க மறந்து, கூட்டணி பேச்சில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருப்பது அவமானத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

ஒரு நிர்பயாவிற்கு குரல் கொடுத்த தேசம் மற்றும் அரசியல் கட்சிகள், கருத்துக்கணிப்பு மற்றும் தேர்தல் கூட்டணி செய்தி போதையில் இருந்து விடுபட்டு, குற்றவாளிகள் மீது செலுத்த வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

More News >>