ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டிய ஏர்முனை இளைஞர் அணி

அமெரிக்கா : ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக ஏர்முனை இளைஞர் அணி சார்பில் திரட்டப்பட்ட ரூ.77 ஆயிரம் நிதியை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் காசோலையாக பெற்றுக்கொண்டார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக உலகம் முழுவதிலிருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், தனிப்பட்டு முறையிலும் தமிழ் ஆர்வலர்கள் நிதி திரட்டி வருகின்றனர். அந்த வகையில், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் தமிழ் இருக்கைக்காக நிதி திரட்டியது.

அதன்படி,ஏர்முனை இளைஞர் அணி திரட்டிய ரூ. 77,291 தொகையை இன்று காலை ஹார்வர்டு தமிழ் இருக்கை தமிழக பொறுப்பாளர் மருத்துவர் திரு.ஆறுமுகம் முன்னிலையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.மாபா.பாண்டியராஜன் அவர்களிடம் காசோலையாக நேரில் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, ஏர்முனை மாநில தலைவர் திரு.என்எஸ்பி.வெற்றி,செயலாளர் திரு.சி.நா.சக்தி வேல்மணி,பொருளாளர் திரு.ஆர்.ஏ.பிரதீப், வேலூர் மாவட்ட தலைவர் திரு.யோகீஸ்வரன், திரு.சுபாஷ், திரு.பா.பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

More News >>