ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்ட விஷால், ராகவா லாரன்ஸ்! சுவாரஸ்ய தகவல்

விஷால் நடிப்பில் அயோக்யா படமும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் காஞ்சனா 3 படமும் தற்பொழுது தயாராகிவருகிறது. இவ்விரு படங்களுமே தங்களுடைய வெளியீட்டு தேதியை பரிமாறிக் கொண்டுள்ளது.

விஷால் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் அயோக்யா. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி ஹீட்டான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த அயோக்யா. படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிந்து பட வெளியீட்டு தயாராகியிருக்கும் அயோக்யா படத்தை ஏப்ரல் 19ல் வெளியிட படக்குழு முடிவெடுத்திருந்தது. இந்நிலையில் விஷாலுக்கு ராசியான நாள் மே 10 என்பதால் படத்தை அன்றைய நாளுக்கு மாற்றியிருக்கிறது படத்தின் தயாரிப்பு தரப்பு. கடந்த வருடம் மே 10ல் வெளியான இரும்புத் திரை விஷாலுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வரும் படம் காஞ்சனா 3. முனி படத்தின் நான்காம் பாகமும், காஞ்சனா சீரிஸின் மூன்றாம் பாகமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. முன்னதாக படத்தின் படப்பிடிப்பில் திருப்தியடையாத ராகவாலாரன்ஸ் படத்தின் சில காட்சிகளை மறுபடப்பிடிப்பு செய்தார். அதனால் படம் மே மாதம் வெளியாகும் என்றே படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் படப்பிடிப்பு வேகமாக நடந்து முடிந்திருப்பதால் ஏப்ரல் 19லேயே படத்தை வெளியிட்டுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறது தயாரிப்பு நிறுவனம். அதை உறுதியும் செய்துள்ளது.

ஆக, மே மாதம் வெளியாக இருந்த காஞ்சனா 3யை ஏப்ரல் 19லும், விஷாலின் அயோக்யா ஏப்ரல் 19லிருந்து மே 10ம் தேதிக்கும் மாறியிருக்கிறது.

More News >>