கமல் ஏன் உலகநாயகன் ஆனார்... இந்த போலந்து சிறுவனே சாட்சி!

கமல் ஏன் உலகநாயகன் ஆனார்... இந்த போலந்து சிறுவனே சாட்சி!

போலந்து நாட்டைச் சேர்ந்த எட்டு வயதே நிரம்பிய சிறுவன் zbigniew உலகநாயகன் கமலஹாசனின் தீவிர ரசிகர். சிறுவயதிலேயே, அவரது படங்களைப் பார்த்து பார்த்து பாடல்களை பாடக் கற்றுக் கொண்டிருக்கிறான். கடந்த 1980ம் ஆண்டு, கமலஹாசன் நடித்த தெலுங்குப் படமான 'சாகரசங்கம்' படத்தில் இடம் பெற்றிருந்த' தகிட ததிமி தந்தானா பாடலை பாடி, அதனை ட்வீட்டரில் பதிவு செய்திருந்தான். 'இந்த ட்விட் உங்களை (கமல்) அடைந்தால், எனக்கு பதிலிடுங்கள். உங்கள் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. நான் இந்தப் பாடலை பாட முயற்சிசெய்துள்ளேன்' என்று பதிவு செய்திருந்தார். ட்வீட்டைப் பார்த்த கமல்,, இந்தப் பாடலைத் தெலுங்கில் எத்தனையோ சிறுவர்கள் பாடியுள்ளனர். ஆனால், நீ பாடியது ஸ்பெஷல். இந்தப் பாடலைப் பாடியதற்கு நன்றி என நெகிழ்ந்துள்ளார்.

அந்த சிறுவனின் ட்வீட்டர் பாக்கத்தில் சென்றுப் பார்த்தால், 'நான் போலந்தைச் சேர்ந்தவன், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறேன். நடிப்பும் பாடல்களும் எனக்கு பிடித்த விஷயங்கள். போலந்தும் இந்தியாவும் எனக்குப் பிடித்த நாடுகள் எனச் சொல்லப்பட்டிருந்தது. சிறுவன் பாடிய பாடல் தற்போது ஆன்லைனில் வைரலாகி வருகிறது. இந்தியா முழுவதும் இருந்து zbigniew-க்கு வாழ்த்துகள் குவிகிறது. இதையடுத்து சென்னையில் இருந்தும் வாழ்த்து குவிந்து வருகிறது. இதையடுத்து, 'நன்றி சென்னை.... அடிமனதில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்.' வருங்காலத்தில் நீ நடிகராக உருவானால், கமல்ஹாசன் போல நடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் 'என எனது தந்தை கூறியிருக்கிறால். இந்தியாவிலேயே அழகுமிகுந்தவர்கள் இசையை நேசிக்கும் தமிழர்கள்' என பதிவிட்டுள்ளான்.

உலக நாயகனே கண்டங்கள் கண்டு வியக்கும்... என்கிற தசவாரப் படப் பாடல் உண்மையாகிக் போனதுதான் ஆச்சரியம்!

More News >>