சொன்னதை செய்த சீமானின் 20-20 - இருபது பெண் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

மக்களைவைத் தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 20 பெண்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவார்கள் எனக் கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்

நாம் தமிழர் கட்சி சார்பாக 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் எனவும் , ஆரம்பம் முதலே பாதிக்கு பாதி பெண்கள் நிறுத்தப்படுவார்கள் எனவும் சீமான் கூறி வந்தார் . தமிழகத்தில் நாளையுடன் வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர் .

இந்நிலையில் இன்று 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அவர்களின் பெயர்களையும் சீமான் வெளியிட்டார் . 20 தொகுதிகளுக்கான பெண் வேட்பாளர் பட்டியல்1. வேலூர் - தீபலட்சுமி2. பெரம்பலூர் - க. சாந்தி3. வடசென்னை - பி. காளியம்மாள் 4. பொள்ளாச்சி - அ. சனுஜா5. இராமநாதபுரம் - தி. புவனேஸ்வரி6. கடலூர் - சா. சித்ரா7. திருநெல்வேலி - பா. சத்யா 8. தருமபுரி - ர. ருக்மணிதேவி9. திருவள்ளூர் (தனி) - ம. வெற்றிச்செல்வி10. விழுப்புரம் (தனி) - பிரகலதா11. நாகப்பட்டினம் (தனி) - பொ. மாலதி12. மயிலாடுதுறை - கு. சுபாஷினி13. நீலகிரி (தனி) - சே.மணிமேகலை14. ஈரோடு - மா.கி.சீதாலட்சுமி15. காஞ்சிபுரம் (தனி) - த.ரஞ்சனி16. தென்சென்னை - அ.ஜெ. ஷெரின்17. மதுரை - க. பாண்டியம்மாள்18. சிவகங்கை - வே. சக்திப்பிரியா19. ஆரணி - அ.தமிழரசி20. புதுச்சேரி - நி. ஷர்மிலாபேகம்

அதிமுக ,திமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகளில் பெண்களுக்கு மிக குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி பெண்களுக்கு ஏற்கனவே கூறி வந்த நிலையில் 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது .இதன் மூலம் பெண்களுக்கு 50 சதவீதம் சம உரிமை அளித்துள்ளது . மேலும் இந்த பட்டியலில் உள்ள பெண்கள் அனைவரும் நன்கு படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . நாம் தமிழர் கட்சியினர், 'சொல் ஒன்று செயல் ஒன்று 'என்றில்லாமல் சொன்னதை செய்து அனைத்து தரப்பினரிடமும் வெகுவான பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.

More News >>