மம்தா கட்சியுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி - அந்தமானில் பிரச்சாரம் செய்கிறார் கமல்

மே.வங்க முதல்வர் மம்தாவின் திரிணாமுல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் நலைவர் கமல். அந்தமான் தீவில் போட்டியிடும் திரிணாமுல் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார்.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தில் இந்திய குடியரசுக் கட்சி, வளரும் தமிழகம் ஆகிய குட்டிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் களம் காண உள்ளது. கோவையில் நேற்று முன்தினம் நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து கட்சியின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார் கமல்.

கோவை கூட்டத்தை முடித்த கமல், நேராக நேராக நேற்று கொல்கத்தா சென்றார். அங்கு மே.வங்க முதல்வரும் திரிணாமுல் கட்சித் தலைவருமான மம்தாவைச் சந்தித்தார் கமல். அப்போது அந்தமான் தீவில் போட்டியிடும் திரிணாமுல் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் என அறிவித்தார். அந்தமான் நிகோபார் தீவுகளில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால் அங்கு திரிணாமுல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கமல் அறிவித்துள்ளார்.

More News >>