சிம்பு படத்தில் தோல்வி விஷால் படத்துக்கு நகர்ந்த சுந்தர் சி.. என்ன சங்கதி nbsp

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’. பவன்கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியான அத்தாரண்டிகி தாரேதி படத்தின் தமிழ் ரீமேக் தான் அது. தெலுங்கில் தந்த வெற்றியை தமிழில் இப்படம் தரவில்லை. இந்நிலையில் அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் சுந்தர். சி.

ஏற்கெனவே விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் ‘மத கஜ ராஜா’ மற்றும்  ‘ஆம்பள’ படங்கள் உருவானது. இதில் ‘மத கஜ ராஜா’ இன்னும் ரிலீஸாக வில்லை. இந்நிலையில் இவர்களின் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தை விஷாலின் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனமும், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் துவங்க இருக்கிறதாம். படத்தின் முக்கியமான காட்சிகளை 50 நாட்கள் அங்கு படமாக இருக்கிறது படக்குழு.

படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே விஷாலுடன் கத்தி சண்டை படத்தில் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார். மற்றுமொரு கூடுதல் தகவல் என்னவென்றால் படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

More News >>